Monday, 29th April 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பெரம்பலூர் : செட்டிகுளம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் தைத்திருவிழாவை முன்னிட்டு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் பிரசித்தி பெற்ற இத்திருக்கோவிலில் 12 ராசிகளுக்கு 12 தூண்களில் 12 குபேரன் வீற்றிருந்து குபேர பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
ஆண்டு தோறும் தைப்பூசத்தன்று திருத்தேர் திருவிழா நடைபெறும். இதனிடையே இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு பரவல் காரணமாக கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் நாளை தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது.
இதனிடையே செட்டிகுளம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் முன்பு நடமாடும் மருவத்துவ வாகனம் மூலம் திருக்கோவில் பணியாளர்கள், விழா குழுவினர்கள், கிராம முக்கியஸ்தர்கள், திருவிழா கடை போடுபவர்கள், கடை உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனை முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் மகாலெட்சுமி,நடமாடும் மருத்துவமனை மருத்துவர் - தேவி பிரித்தீ செட்டிகுளம் மருத்துவமனை மருத்துவர் சிவசந்திரன், ஆய்வக பணியாளர் சுகன்யா ஹெல்த் இன்ஸ்பெக்டர் - ஆனந்த் மற்றும் ஜானேஸ்வரன் , பிரபாகரன், உள்ளிட்டோர் கரோனா மருத்துவ பரிசோதனையில் கலந்து கொண்டனர்.